Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அன்புச் செழியன் பெயரைக் கூட உங்களால சொல்ல முடியலையே விஷால்... சுசீந்திரன் சுளீர்!
Recommended Video
சென்னை : நடிகர் சசிகுமாரின் கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த அவரது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரால் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக அசோக் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து இயக்குநர் சுசீந்திரன் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்.
அசோக் தற்கொலை
நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக், சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். அவர் நேற்று மாலை ஒரு கடிதம் எழுதிவைத்துவவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டிக் கொடுமையால் மிகவும் துன்பப்பட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக எழுதியிருக்கிறார் அசோக். கந்துவட்டிக்காரர்களால் மிரட்டலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துகொள்வதாக உருக்கமான கடிம் எழுதியிருக்கிறார்.
மதுரை அன்புச்செழியன்
சினிமா ஃபைனான்சியர், தயாரிப்பாளர் என சினிமா மாஃபியாவாக வலம் வரும் அன்புச் செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. நடிகர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்புச் செழியன் மீது கந்துவட்டிக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளார்.
|
விஷால் அறிக்கை
இந்நிலையில், அசோக்கின் தற்கொலை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் 'கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும், கந்துவட்டிக் காரர்கள் தமிழ் சினிமாவில் இருந்து ஓடிவிடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அசோக் சாவுக்கு காரணமாக இருந்த கந்துவட்டி அன்புவின் பெயரை அறிக்கையில் ஒரு இடத்தில கூடக் குறிப்பிடவில்லை.
|
சுசீந்திரன் கேள்வி
விஷாலின் அறிக்கையை சினிமா பி.ஆர்.ஓ ஜான்சன் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் இயக்குநர் சுசீந்திரன் காட்டமாக ரிப்ளை செய்திருக்கிறார். 'அன்புவின் பெயரைக் குறிப்பிடவே பயப்படுகிறீர்கள், நீங்கள் எப்படி தயாரிப்பாளர்களின் பிரச்னையை தீர்க்கப் போகிறீர்கள்' என இயக்குனர் சுசீந்திரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்தக் கேள்வியையே பலரும் எழுப்பி வருகிறார்கள்.