Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அன்புச் செழியன் பெயரைக் கூட உங்களால சொல்ல முடியலையே விஷால்... சுசீந்திரன் சுளீர்!
Recommended Video
சென்னை : நடிகர் சசிகுமாரின் கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த அவரது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரால் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக அசோக் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து இயக்குநர் சுசீந்திரன் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்.
அசோக் தற்கொலை
நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக், சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். அவர் நேற்று மாலை ஒரு கடிதம் எழுதிவைத்துவவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டிக் கொடுமையால் மிகவும் துன்பப்பட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக எழுதியிருக்கிறார் அசோக். கந்துவட்டிக்காரர்களால் மிரட்டலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துகொள்வதாக உருக்கமான கடிம் எழுதியிருக்கிறார்.
மதுரை அன்புச்செழியன்
சினிமா ஃபைனான்சியர், தயாரிப்பாளர் என சினிமா மாஃபியாவாக வலம் வரும் அன்புச் செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. நடிகர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்புச் செழியன் மீது கந்துவட்டிக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளார்.
|
விஷால் அறிக்கை
இந்நிலையில், அசோக்கின் தற்கொலை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் 'கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும், கந்துவட்டிக் காரர்கள் தமிழ் சினிமாவில் இருந்து ஓடிவிடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அசோக் சாவுக்கு காரணமாக இருந்த கந்துவட்டி அன்புவின் பெயரை அறிக்கையில் ஒரு இடத்தில கூடக் குறிப்பிடவில்லை.
|
சுசீந்திரன் கேள்வி
விஷாலின் அறிக்கையை சினிமா பி.ஆர்.ஓ ஜான்சன் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் இயக்குநர் சுசீந்திரன் காட்டமாக ரிப்ளை செய்திருக்கிறார். 'அன்புவின் பெயரைக் குறிப்பிடவே பயப்படுகிறீர்கள், நீங்கள் எப்படி தயாரிப்பாளர்களின் பிரச்னையை தீர்க்கப் போகிறீர்கள்' என இயக்குனர் சுசீந்திரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்தக் கேள்வியையே பலரும் எழுப்பி வருகிறார்கள்.
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!
-
செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை