Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுசீந்திரன்!
Recommended Video
சென்னை : பிரபல ஃபைனான்சியர் அன்புச் செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் செய்தியால் தமிழ்த் திரையுலகமே கொதித்துப் போயுள்ளது. கந்துவட்டிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை வெளியிட்டார்.
ஃபைனான்சியர் அன்புச் செழியனால் பல சினிமாக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
— Suseenthiran (@dir_susee) November 22, 2017 |
சுசீந்திரன் அறிக்கை
அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவின் கடைசி தற்கொலை மரணமாக இருக்கவேண்டும் எனத் தொடங்கி, அதிர்ச்சித் தகவல்கள் நிறைந்த அறிக்கையை சற்று முன்பு வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
— Suseenthiran (@dir_susee) November 22, 2017 |
அதிர்ச்சித் தகவல்
' 'நான் கடவுள்' படம் உருவான நேரத்தில் இந்த அன்புச் செழியனால் அஜித் சார் பாதிக்கப்பட்டார். அப்போது அஜித் சாரும் அசோக்கின் இப்போதைய மனநிலைக்கு ஆளானார்' எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன். இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
திரைப் பிரபலங்கள் பலரும்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான லிங்குசாமி, கௌதம் மேனன் உள்பட பல முன்னணி நடிகர்களும் அன்புச்செழியனிடம் சிக்கியுள்ளார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களில் முக்கால்வாசிப் பேர் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்
இசையமைப்பாளர் இமானிடம் கூட, எந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதைக் கூட மறைமுகமாக சிரித்துக்கொண்டே மிரட்டியிருக்கிறாராம் அன்புச்செழியன்.
தண்டிக்க வேண்டும்
தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்குக் காரணமான அன்புச்செழியனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.