Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மாவீரன் கிட்டு.... இது சுசீந்திரனின் அடுத்த படத் தலைப்பு!
விஷ்ணுவை திரையில் ஹீரோவாக வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகப்படுத்தியவர் சுசீந்திரன். இன்று விஷ்ணு ஒரு முக்கிய நடிகராகிவிட்டார்.
மீண்டும் ஜீவா படத்தில் இருவரும் இணைந்தனர்.
இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் - பார்த்திபன் நடிக்க, நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்குகின்றனர். இந்தப் படத்துக்கு மாவீரன் கிட்டு என்று தலைப்பிட்டுள்ளனர்.
படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவா படத்தில் ஏற்கெனவே ஸ்ரீதிவ்யாவும் விஷ்ணுவும் ஜோடி சேர்ந்தது நினைவிருக்கலாம். வழக்கம்போல சூரிக்கு இந்தப் படத்தில் முக்கிய வேடம்.
மாவீரன் கிட்டு படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமானது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது,
படத்தின் கதை ஈழப் பிரச்சினையுடன் தொடர்புடையதா என்ற கேள்விக்கு பதிலளித்த சுசீந்திரன், "மாவீரன் கிட்டு' இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம்," என்று முடித்துக் கொண்டார்.
படத்துக்கு கவிஞர் யுகபாரதி வசனம் எழுதி, பாடல்களையும் இயற்றுகிறார். டி இமான் இசையமைக்கிறார்.