Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிபிஐ விசாரணை தீவிரம்.. சுஷாந்த் சிங் நண்பர், மானேஜர் முன்பு நடிகை ரியாவிடம் சரமாரி கேள்வி!
மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள், நான்காவது நாளாக இன்றும் விசாரித்து வருகின்றனர்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. அவரது மரணம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்வி ஊக்கத் தொகை.. இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான்.. அடுத்த உதவியை அறிவித்தார் நடிகர் சூர்யா!
பணமோசடி
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், சுஷாந்த் சிங்கை அவர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமலாக்கத்துறை
இதுபரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, நடிகை ரியாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியது. அவர்கள் பல மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பணமோசடி தொடர்பாகவும் நடிகை ரியாவுக்கு எதிராகவும் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விருந்தினர் மாளிகை
இந்நிலையில் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், சாந்தா குரூஸில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தார்த் பிதானி
சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவர் நண்பர் சித்தார்த் பிதானி, ராஜத் மேவதி, சாமுவேல் மிரந்தா, சமையல்காரர் நீரஜ் சிங், வேலைக்காரர் கேசவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நடிகை ரியாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை பத்து மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினமும் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அவர் சகோதரர் சோவிக்கும் ஆஜரானார்.
நேருக்கு நேராக
இந்த விசாரணையில் சித்தார்த் பிதானி, மானேஜர் சாமுவேல் ஆகியோரை நேருக்கு நேராக அமரவைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விசாரணை இன்றும் தொடர்கிறது. இன்றும் நடிகை ரியா சக்கரவர்த்தி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி உள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ, இன்றும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருகின்றனர்.