twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு.. அவரது மற்றொரு காதலியிடம் பீகார் போலீசார் விசாரணை!

    By
    |

    மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியிடம் பீகார் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    Recommended Video

    Dilbechara overtakes Bahubali box office Collection

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மன அழுத்தம்.. சுஷாந்தை தொடர்ந்து.. மேலும் ஒரு இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி!மன அழுத்தம்.. சுஷாந்தை தொடர்ந்து.. மேலும் ஒரு இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி!

    மன அழுத்தம்

    மன அழுத்தம்

    கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா கடந்த 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியானது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

    ரியா சக்கரவர்த்தி

    ரியா சக்கரவர்த்தி

    சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.

    சுஷாந்த் சிங் தந்தை

    சுஷாந்த் சிங் தந்தை

    இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    அங்கிதா லோகண்டே

    அங்கிதா லோகண்டே

    இதையடுத்து ரியா, அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பாட்னா போலீசார், மும்பை வந்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான டிவி நடிகை அங்கிதா லோகண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'Truth Wins' என்று குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பானது.

    பாட்னா போலீசார்

    பாட்னா போலீசார்

    மும்பை வந்துள்ள பாட்னா போலீசார், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை அங்கிதா லோகண்டேவிடம் நேற்று விசாரணை நடத்தினர். அங்கீதாவின் வீட்டுக்குச் சென்ற பாட்னா போலீசார் சுஷாந்த் சிங் பற்றியும் ரியா பற்றியும் அங்கீதாவின் காதல் பற்றியும் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Sushant Singh Rajput’s ex-girlfriend Ankita Lokhande questioned by Bihar Police at her Mumbai residence
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X