Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அவர் இல்லை என்பதே பெரும் வலியை தருகிறது' தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் டீம் அறிக்கை!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லை என்பது பெரும் வேதனையை அளிக்கிறது என்று அவரது குழு சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இவர். அடுத்து, சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்தார்.
பிரகாசமான இளம் நடிகர் சீக்கிரம் போய்விட்டாரே.. சுஷாந்த் சிங் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்
எம்.எஸ்.தோனி
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை கதையான எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தை அடுத்து ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தன.
தூக்குப் போட்டு
இந்நிலையில் சுஷாந்தின் மானேஜர் திஷா சாலியன், அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரதமர் மோடி
இந்தச் செய்தி பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டீம் சார்பில் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பெரும் வலி
சுஷாந்த் சிங் ராஜ்புத், இனி நம்முடன் இல்லை என்பதை பகிர்ந்து கொள்வது பெரும் வலியை தருகிறது. ரசிகர்கள் அவரைத் தங்களது மனதில் வைத்து, இதுவரை செய்ததை போல, அவரது வாழ்வையும் நடிப்பையும் கொண்டாட கேட்டுக்கொள்கிறோம். இந்த துக்கமான தருணத்தில் மீடியா எங்கள் தனிமையை அனுசரிக்க உதவுமாறு கேட்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.