Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கர்ப்பமா? வெளியானது திடுக்கிடும் தகவல் !
மும்பை : இந்திய திரையுலகில் பல நாட்களாக பலராலும் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால் அது சுஷாந்த் சிங். சுஷாந்த் சிங் இந்திய திரைப்படத் துறையில் ஏற்படுத்தி இருக்கும் இறப்பு பலரையும் இன்றுவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
இவரின் மர்மமான தற்கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று பலரும் தெரியாமல் குழம்பி இருக்கும் நிலையில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணத்திற்கு முன்பு அவரிடம் பணியாற்றிய மேனேஜர் திஷா தற்கொலை செய்து கொண்டார் அதற்கு பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் தற்பொழுது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.
வெற்றி நாயகனாக
இந்தியில் கைபோசே, தோனி என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக அனைவரையும் கவர்ந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பல கோடி ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார்.
மன அழுத்தம்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணத்திற்கு மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் இதில் இருக்கும் மர்மங்கள் இன்றும் முடிச்சுக்குள் முடிச்சு என நீடித்துக் கொண்டிருக்கிறது.
திஷா சாலியன்
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் மேனேஜராக பணிபுரிந்த திஷா சாலியன் என்ற பெண் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி காட்டுத் தீ போல திரையுலகில் பரவி வந்த நிலையில் ஓரிரு நாட்களிலேயே சுஷாந்த் சிங்கும் தற்கொலை செய்து கொண்டார்.
நடிகர் சூரஜ் பஞ்சோலி
மேனேஜர் திஷா நடிகர் சூரஜ் பஞ்சோலி என்பவருடன் பல வருடங்களாக காதலில் இருந்ததாகவும் இதன் காரணமாக திஷா கர்ப்பம் அடைந்ததாகவும் விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என சூரஜ் திஷாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் திஷா இதை யாரிடமும் பகிராமல் தனது நெருங்கிய நண்பரான சுஷாந்த் சிங்கிடம் மட்டும் பகிர்ந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மிரட்டியதாகவும்
இந்த விஷயத்தை அறிந்த சுஷாந்த் சிங் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை வெளிகொண்ட வர இருந்ததாகவும் ஆனால் சூரஜ் சுஷாந்த் சிங்கை மிரட்டியதாகவும் அதனால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் திஷா தற்கொலை செய்து கொண்டபோது கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த கர்ப்பத்திற்கு நடிகர் சூரஜ் பஞ்சோலி தான் காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
குழந்தையை வளர்க்க
மேலும் சூரஜ் இதற்கு முன் ஜியாகான என்ற நடிகையுடன் காதலில் இருந்ததாகவும் அதன் காரணமாக ஜியாகான் கர்ப்பம் அடைந்ததாகவும் அந்த குழந்தையை வளர்க்க சூரஜ் மறுத்ததால் கடுமையான வேதனையில் இருந்த ஜியாகான் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகளில் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது திஷாவின் தற்கொலை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுஷாந்த் மரணத்தில்
இவ்வாறு சுஷாந்த் சிங்கின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்ம முடிச்சுகளுக்கு பின்பும் பாலிவுட் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் உள்ளதாகவும், காவல்துறை இதை சரியான வகையில் கையாண்டால் பல உண்மைகள் வெளிவரும் என சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!