இந்தி, தமிழ், மராத்தியில் படம் தயாரிக்கும் சுசிகணேசன்!

மூன்று படங்களைத் தயாரிக்கும் அவர், அதுகுறித்து இப்போது செய்தி வெளியிட்டுள்ளார்.
விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன். திருட்டுப்பயலே' படத்தை இந்தியில் தயாரித்து இயக்கினார். படுதோல்வியைத் தழுவியது அந்தப் படம். ஆனாலும் தொடர்ந்து இந்தியில் கிங் ஜோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்போது மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்த ஒரு மலையாளப் படத்தை தமிழில் தயாரிக்கிறார். இயக்கவில்லை. அதேபோல, களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களை முறைய மராத்தி, இந்தியில் தயாரிக்கிறார்.
இதுகுறித்து சுசி கணேசன் கூறுகையில், "நான் தயாரிக்கும் மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூன்றுமே வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையை பக்கபலமாக கொண்ட படங்கள். மூன்று படங்களையுமே இந்த ஆண்டில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறேன். இதுதவிர, 'கிங் ஜோ' என்ற இந்தி படத்தை இயக்குகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











