இயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்
Recommended Video

சென்னை: கவிஞர் லீனா மணிமேகலையின் பாலியல் புகாரை மறுத்துள்ளார் இயக்குனர் சுசி கணேசன்.
திருட்டுப்பயலே பட புகழ் இயக்குனர் சுசி கணேசன் கடந்த 2005ம் ஆண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ளார்.
அதை பார்த்த சுசி கணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். லீனா விவகாரம் குறித்து சுசி கணேசன் கூறியிருப்பதாவது,
[காரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்]

பொய்
லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்....உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ???

கார்
அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே , ஒருவர் தனியாக காரில் ஏறச் சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி( ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

நீதிமன்றம்
அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை , உன்னைப் போன்ற .metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் " சமுதாய வைரஸ்களை" களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.
கற்பு
Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் , சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்ப முடியாமல், ஏனோ என் மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள் #metoo #itstime #leenamanimekalai #sexualharassment #sexualabuse


Click it and Unblock the Notifications











