Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் அர்ஜுன் ராம்பல், மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியா?
மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுடனான தொடர்பால் தான் நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரின் மனைவியும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரது மனைவி மெஹர் ஜெசியாவும் திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து தற்போது பிரிந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் இந்த முடிவுக்கு காரணம் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் என்று கூறப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டிலேயே ராம்பல், மெஹர் இடையே பிரச்சனை ஏற்படத் துவங்கியதாம்.
ராம்பல்
கடந்த 2011ம் ஆண்டில் ஷாருக்கானின் ரா ஒன் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து தூதுவிட்டார் அர்ஜுன் ராம்பல். ஆனால் இணை தயாரிப்பாளரான ஷாருக்கானிடம் தனது கணவருக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தார் மெஹர். இதையடுத்து ஷாருக்கான் அர்ஜுன் ராம்பலை ஒதுக்கி வைத்தார். ஷாருக்கானின் மனைவி கவுரி தனது தோழியான மெஹருடன் பேசுவதை நிறுத்தினார்.
சூசன்
ஷாருக்கானை அடுத்து பிரபல இயக்குனர் கரண் ஜோஹாருக்கும், அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பாலிவுட்டின் பெரிய ஆட்கள் ராம்பலை ஒதுக்கத் துவங்கினர். அந்த நேரத்தில் தான் அவர் சூசனிடம் நெருக்கமானார்.
மெஹர்
சூசனும், அர்ஜுன் ராம்பலும் மிகவும் நெருக்கமானது மெஹர் ஜெசியாவுக்கு கலக்கத்தை கொடுத்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.
சண்டை
பிரபலம் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் சூசனுக்கும், மெஹருக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றி இருவரும் திட்டித் தீர்த்துள்ளனர். இதையடுத்து மெஹர் அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
மோதல்
பிரச்சனை பெரிதான பிறகு சூசனை பார்க்க மாட்டேன் என்று அர்ஜுன் மெஹரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக சூசனை சந்தித்து பேசி வந்துள்ளாராம். இதை கண்டுபிடித்த மெஹர் கடும் கோபம் அடைந்துள்ளார்.
ஆத்திரம்
சூசன், ராம்பல் ரகசிய சந்திப்புகளால் மெஹர் தனது கணவர் மீது கோபப்பட்டுள்ளார். இருவரும் சத்தமாக சண்டை போட்டு வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து ஒருவர் மீது மற்றொருவர் வீசியுள்ளனர். சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அடக்கிவாசிக்காவிட்டால் போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.