எம்.ஆர்.ராதாவுக்கு இணையான நடிகர் என என்னைப் பாராட்டினார் கலைஞர்: எஸ்.வி.சேகர்!
சென்னை: தனக்கு தந்தை போன்றவர் கலைஞர் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்துவிட்டார். தொண்டர்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரின் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கலைஞருக்கும் தனக்குமான நெருக்கம் குறித்து நெகிழ்வாக சில விஷயங்களை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்துள்ளார்.
கொள்கை அடிப்படையில் மாறுபட்டவர்களாக இருந்தாலும், எப்போதுமே எஸ்வி.சேகரிடம் தந்தை போல பாசம் காட்டுவாராம்.
அரசியல் பணிகளில் ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதும் எஸ்.வி.சேகரின் அழைப்பை ஏற்று அவருடைய நாடகங்களை ரசித்து பார்த்துள்ளாராம்.
குறிப்பாக 3500வது நாடகம் மற்றும் 5500வது நாடகத்தை கலைஞர் பார்த்து, நடிப்பில் எம்.ஆர்.ராதாவுக்கு இணையானவர் என புகழ்ந்தது என்னால் மறக்க முடியாது எனக் கூறுகிறார் எஸ்.வி.சேகர்.


Click it and Unblock the Notifications











