Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்.. ஆளுநரை சந்தித்தது சுவாமி சங்கர்தாஸ் அணி!
சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சுவாமி சங்கர்தாஸ் அணியினர் சென்னையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர்.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 61 உறுப்பினர்கள் திடீரென நீக்கப்பட்ட, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்தலை மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக பாண்டவர் அணியினர் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் நாசர், விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சுவாமி சங்கர்தாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.
காலை 11 மணி அளவில் கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேச சுவாமி சங்கர்தாஸ் அணியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
அப்போது நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆளுநரிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளுநரிடம் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் புகார் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.