ஆர்யா சூர்யா வில் பட்டையை கிளப்பும் டி.ராஜேந்தர் நடனம்
ராம.நாராயணன் இயக்கும் ஆர்யா சூர்யா படத்தில் பட்டையைக் கிளப்பும் பாடல் ஒன்றினை எழுதி செட் அமைத்து நடனமாடப் போகிறாராம் டி.ராஜேந்தர்.
டிவியில் அரட்டை அரங்கம், சூப்பர் குடும்பம் நடுவர் என பிஸியாக இருந்த டி.ராஜேந்தர் சினிமாவில் ஒரு பாடல் எழுதி நடனமாடி அசத்த உள்ளார்.
ஆர்யா சூர்யாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜெயிலில் இருப்பதால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக டி.ராஜேந்தரிடம் பாடல் எழுதி நடனமாட கேட்டுக் கொண்டுள்ளராம்.

ஆர்யா சூர்யா
பவர் ஸ்டார் சீனிவாசனை நாயகனாக்கி 'ஆர்யா சூர்யா' என்கிற படத்தினை ராம. நாராயணன் இயக்கி தயாரித்து வருகிறார். இவரது படப்பிடிப்பில் இருக்கும் போதுதான் சீனிவாசனை போலீசார் கைது செய்தார்கள்.

பாதியில் நிற்கிறதே?
படம் பாதியில் நிற்பதால் அதை தவிர்க்கவும் விளம்படுத்தவும் நினைத்த போது ராம. நாராயணன் நினைவில் வந்தவர் டி.ராஜேந்தர்தான். ஒரு பாடலை எழுதி, இசையமைத்து, செட் அமைத்து, அப்பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று ராம.நாரயணன் கேட்டுக் கொண்டதால் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் டி.ஆர்.

25 லட்சம் சம்பளம்
ஒரு பாடலை எழுதி, இசையமைத்து, செட் அமைத்து, நடனமாட டி.ஆர். வாங்கி இருக்கும் சம்பளம் அதிகமில்லை 25 லட்சம் தான். 'யம்மாடி. இதுநாள் வரை டிவியில் நடுவராக அமர்ந்து மார்க் போட்ட டி.ஆர் ஆத்தாடி' பாணியில் பட்டய கிளப்பும் ஒரு பாடலை உருவாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











