Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டி.ராஜேந்தரின் சர்ச்சை பேச்சு!
சென்னை : நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், தமிழ் மற்றும் இந்தியில் எழுதி, இசையமைத்த வந்தே வந்தே மாதரம் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்திர். இவருக்கு கடந்த ஜூலை மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். சிகிச்சைக்கு பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்த டி ராஜேந்தர் வந்தே வந்தே மாதரம் என்ற ஆல்பம் பாடலை பேரனுடன் இணைந்து பாடி உள்ளார்.
ரஜினிக்கு
எப்படி
அந்த
மூன்றெழுத்தோ
அதேபோல
சிம்புவிற்கு
இந்த
மூன்றெழுத்து...
டி.ராஜேந்தர்
பெருமிதம்!

டி.ராஜேந்தர்
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், என் வாழ்க்கையில் முக்கியமான நாள், என்னடா உணர்ச்சிவசப்படுகிறார் என்று நினைக்கலாம், உணர்ச்சி வசப்படுபவன் தான் நல்ல உணர்வு உள்ள மனிதன். என்னுடைய முதல் படம் ஒரு தலை ராகத்தில் இருந்து காதல் அழிவதில்லை படம் வரை அனைத்து படத்திற்கும் நான் இசையமைத்து இருக்கிறேன். பல படங்களுக்கு ப்ளாட்டினம் டிஸ்க் வாங்கி இருக்கிறேன்.

டி.ஆர் ரெக்கார்ட்ஸ்
மேலும், டி.ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற இசை நிறுவனத்தின் சார்பில் உருவாக்கி இருக்கிறேன். இதில்,ஆயிரக்கணக்கான டியூன்கள் உள்ளது. இந்த நிறுவனம் எனக்கு மட்டுமில்லாமல், சின்ன சின்ன தயாரிப்பாளர் வேதனையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறேன் என்றார்.

இந்தி இல்லாமல் வாழ முடியுமா?
தமிழகத்தில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நேரத்தில், வந்தே வந்தே மாதரம் பாடலை தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி ராஜேந்திரன், ரூபாய் நோட்டிலும், ரயிலில் இந்தி இருக்கிறது என்பதற்காக அதில் நாம் யாரும் போகாமல் இல்லை, இந்தி இல்லாமல் வாழ முடியுமா? என்றார்.

சங்கப்படுத்த வேண்டாம்
மேலும், அடுத்து தாய்நாட்டுக்காக தமிழ்தேசத்துக்காக ஒரு பாடலை உருவாக்கவிருக்கிறேன் அது என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன் நேரம் வரும் போது நிச்சயம் சொல்லுவேன் என்றார். இதையடுத்து, சிம்பு திருமணம் எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, என் குடும்பம் பற்றி கேள்வி கேட்டு என்னை சங்கப்படுத்த வேண்டாம் என்று டி.ஆர்.ராஜேந்தர் பதிலளித்தார்.