Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஷகீலாவுக்கு கூடத்தான் கூட்டம் கூடும்.. கமல் கூட்டத்தை விமர்சித்த டி.ராஜேந்தர்!
Recommended Video
சென்னை : கமல்ஹாசன் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதை, நடிகரும், அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இலட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், ஆபாச நடிகை ஷகீலாவுடன் கமல்ஹாசனை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
'மக்கள் நீதி மய்யம்' கட்சியை சமீபத்தில் துவக்கிய கமல்ஹாசன் நேற்று திருச்சியில் கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்தினார். கமலின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்த்துக் கருத்துகளைக் கூறி வருகிறார் டி.ஆர்.
கூட்டம் கூடுவது
"தமிழ்நாட்டில் கூட்டம் சேர்ப்பது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாளைக்கே ஷகீலா கட்சி ஆரம்பித்தால் கூடத்தான் அவர் பின்னால் நிறைய பேர் சேருவார்கள். ஆனால், அவர்கள் எல்லாரும் ஷகீலாவுக்கு ஓட்டு போடுவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் டி.ராஜேந்தர்.
ரயில்ல டிக்கெட் கிடைக்கலையா
"நான் 1980-ம் ஆண்டு முதல் ரயிலில் தான் ஊருக்குச் செல்கிறேன். கருணாநிதி, எம்ஜிஆர் உள்பட பல தலைவர்கள் ரயிலில் சென்றுள்ளனர். கமல் விமானத்தில் மட்டுமே செல்பவர். திடீரென ரயிலில் செல்கிறார். 13 வருடமாக அவருக்கு ரயில்வே ஸ்டேஷன் தெரியாதா அல்லது ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லையா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் டி.ஆர்.
இருட்டடிப்பு
ஸ்டெர்லைட் பிரச்னை குறித்த செய்தியை இருட்டடிப்பு செய்துவிட்டு கமல்ஹாசன் ரயிலில் போனதை ஊடகங்கள் பெரிதாக்குந்தாக டி.ராஜேந்தர் கண்டனம் தெரிவித்தார். தொடர்ச்சியாக கமல்ஹாசனின் அரசியலை டி.ராஜேந்தர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
ஒற்றுமையாக போராடவேண்டும்
"பா.ஜ.க நம்மைப் பிரித்து ஆள நினைக்கிறது. எடப்பாடி அரசு, மோடியின் பினாமி அரசு. நாம் அனைவரும் தனித்தனியாகப் போராடாமல் ஒன்றுசேர்ந்து போராடினால், மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறியிருக்கிறார் டி.ஆர்.