Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நான்கு நாயகிகளும்!
கோடம்பாக்கத்தில் வெள்ளிவிழாக் காணும் அளவுக்கு நிலைத்து நிற்பது சாமானிய விஷயமல்ல. அந்த வகையில் டி சிவா சாதித்துவிட்டார். ஆம்.. இது அவரது அம்மா கிரியேஷன்ஸுக்கு 25 வது ஆண்டு.
இந்த வெள்ளி விழா ஆண்டில் அவர் தயாரிக்கும் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.
அந்தப் படம்தான் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். இதில்கதாநாயகிகளாக ரெஜினா கசன்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மேலும் மயில்சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இசை : டி.இமான், பாடல்கள் : யுகபாரதி கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் ஓடம்.இளவரசு.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், "காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.
பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கிறது," என்றார்.
இப்படத்தை அம்மா கிரியேஷன் டிசிவா உடன் 2 எம்பி நிறுவனம் சார்பாக ரகுநாதன், பிஎஸ் சந்திரசேகர் மற்றும் ஆர்சரவண குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். டிசம்பர் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.