Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கஜோல் புருஷனால் தான் நான் இன்னும் சிங்கிளாக உள்ளேன்: தல ஹீரோயின் பேட்டி
மும்பை: 45 வயதாகியும் தான் இன்னும் திருமணமாகாமல் இருப்பதற்கு காரணம் நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் என்று நடிகை தபு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தபுவுக்கு 45 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளார். அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் கேட்கிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
அஜய் தேவ்கன்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனால் தான் நான் திருமணமாகாமல் சிங்கிளாக உள்ளேன். நானும், அஜய் தேவ்கனும் 25 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம்.
நட்பு
என் கசின் சமீர் ஆர்யா வீட்டிற்கு பக்கத்து வீடு அஜய் தேவ்கனுடையது. நாங்கள் எல்லாம் ஒன்றாக வளர்ந்தோம். என் இளம் வயதில் என்னுடன் யாராவது பசங்க பேசினால் உடனே சமீரும், அஜய்யும் அவர்களை பிடித்து மிரட்டுவார்கள்.
பாதுகாப்பு
சமீரும், அஜய்யும் நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து ஒரு பையனையும் என்னுடன் பேசிப் பழக விட மாட்டார்கள். அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக உள்ளேன்.
மாப்பிள்ளை
எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்குமாறு நான் அஜய்யிடம் அண்மையில் கூறினேன். அஜய் குழந்தை போன்றவர். ஆனால் அவர் என்னை பாதுகாப்பதில் குறியாக இருப்பார்.
நடிப்பு
அஜய்யுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு மிகவும் சவுகரியமானது. நண்பர்கள் சேர்ந்து நடிப்பது வசதி தானே. நாங்கள் ஒருவர் மீது மற்றொருவர் பாசம் வைத்துள்ளோம் என்றார் தபு.