Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோலிவுட்டில் ஜெயிக்க அந்த ஒன்னே ஒன்னு போதும்: ஜெயராமின் மகன் காளிதாஸ்
சென்னை: தமிழ் திரையுலகில் இருக்க பணம் மற்றும் இன்னாரின் மகன் என்பது போதாது திறமை இரு்தால் போதும் என நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
அமுதேஷ்வர் இயக்கத்தில் நாளை வெளியாகும் மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் ஹீரோ நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். சாக்லேட் விளம்பரத்தில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளிதாஸ்.
இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறுகயில்,
கோலிவுட்
தமிழ் திரையுலகில் இருக்க பணம் மற்றும் இன்னாரின் மகன் என்பது போதாது திறமை இரு்தால் போதும். நான் ஜெயராமின் மகன் என்பதால் தமிழ் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மோகன்லால்
மலையாள திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது மோகன்லால். மோகன்லாலின் படங்களை ரிலீஸான அன்றே தியேட்டரில் பார்த்துவிடுவேன். புலிமுருகன் படத்தையும் முதல் நாளே பாரத்துவிட்டேன்.
மம்மூட்டி
மம்மூட்டி என் குடும்ப உறுப்பினர் போன்று. எனக்கு படிப்பிலும், நடிப்பிலும் அறிவுரை வழங்கி வருபவர் அவர். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்குமாறு கூறியது அவர் தான் என்றார் காளிதாஸ்.
தேசிய விருது
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கிய காளிதாஸ் மிமிக்ரி செய்வதில் வல்லவர். மீன்குழம்பும் மண் பானையும் படத்திலும் மிமிக்ரி செய்துள்ளாராம்.