Don't Miss!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா?
Recommended Video
சென்னை: சுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போன்று வந்து ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி சுற்றி டான்ஸ் ஆடும் கதாபாத்திரம் இல்லை.
மாறாக வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் கிடைத்துள்ளதில் தமன்னாவுக்கு ஒரே குஷி. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது போர் அடிக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் அவர்.
இந்நிலையில் அவரின் ஆசையை சுந்தர் சி. நிறைவேற்றி வைத்துள்ளார். தமன்னா ஆசைப்படுவது எல்லாம் சரி. இத்தனை ஆண்டுகளாக அவரை காதலி கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் அவரை வில்லியாக ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என் கெரியரில் அஜித்தை தவிர வேறு யாருமே 'அந்த வார்த்தை'யை சொல்லவில்லை: டெல்லி கணேஷ்
தமன்னாவுக்கு தற்போது நல்ல நேரம் என்றே கூற வேண்டும். அவர் நடித்த தெலுங்கு படமான எஃப் 2 சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் அவர் ஆசைப்படுவது போன்ற கதாபாத்திரங்களும் கிடைக்கிறது. ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் சிம்ரன் கூட வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்ரனை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தமன்னாவையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவோம்.
வயது ஏறிக் கொண்டே போகிறதே, திருமணம் எப்பொழுது என்று கேட்டால் அது நடக்கும்போது நடக்கும் என்று கூலாக கூறுகிறார்.