Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
துணை நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
துணை நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
சென்னை: துணை நடிகர் சித்தார்த்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யாகாவாராயினும் நாகாக்க. இப்படத்தில் கிஷோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்தார்த் கோபிநாத்.
சித்தார்த்துக்கும் ஸ்மிரிதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. நேற்றிரவு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வீட்டிற்கு வந்தவுடன், அறையின் கதைவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு படுத்துவிட்டார் ஸ்மிரிதா. ஆத்திரத்தில் சித்தார்த்தும் ஹாலிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் சித்தார்த் எழுந்து கதவை தட்டிய போது மனைவி ஸ்மிரிதா கதவை திறக்கவில்லை.
அதிர்ச்சியடைந்த சித்தார்த் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்த்த போது, ஸ்மிரிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சனை என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக திரைத்துறையில் இருப்பவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.