தமிழ்ல குடும்ப பொண்ணா நடிச்ச ஹீரோயினா இது.. பிகினி படத்தால் வாயடைந்த ரசிகர்கள்
சென்னை: தமிழில் குடும்பபாங்காக நடித்த நடிகை, கோவா பீச்சில் எடுத்த பிகினி படங்களை இணையத்தில் வெளியிட்டு கலங்கடிக்க வைத்துள்ளார்.
அதர்வா ஹீரோவாக நடித்திருந்த, 'செம போத ஆகாதே' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மிஷ்டி சக்ரபோதி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர், வங்க மொழி மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

தமிழுக்கு அறிமுகமான பிறகு, தெலுங்கு திரையுலகிலும் இவர் கால் பதித்தார். இவர் தமிழ், தெலுங்கில் மிகவும் குடும்பபாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்தவர். பார்த்தால் வணக்கம் வைக்கும் அளவுக்கு, ஆடை விஷயத்தில், கண்ணியம் காட்டினார். ஆனால், இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்கள் ஷாக் ரகமாக உள்ளது.
கோவாவிற்கு சமீபத்தில் சென்றுள்ளார் மிஷ்டி சக்ரபோதி. அங்கேயே ஆடைகளை கலைந்துவிட்டு, பிகினியில் செமையாக குளியல் போட்டுவிட்டு, கோவாவின் சிறப்பு மிக்க மணலில் தேகம் படர மல்லாக்க படுத்துவிட்டார். அத்தோடு, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தண்ணீர், மணல், சூரியனின் ஒளி தனக்கு மிகவும் பிடிக்கும் என அதற்கு சுய விளக்கமும் தெரிவித்துள்ளார். ப்ளூ கலர் டூபீஸ் உடையில் நடிகையை பார்த்த அவர் ரசிகர்கள் வாயடைத்துப் போய்விட்டனர்.
குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வருவதால், சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டது. எனவே, அந்த இமேஜை தூள் தூளாக்க, இப்படி கவர்ச்சிப் படத்தை அவர் வெளியிட்டிருக்க வேண்டும் என்று கிசுகிசுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











