Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கே பாலச்சந்தருக்கு சிலை... இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை!
சென்னை: இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்ட மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும் என இயக்குநர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே தலைவராக இருந்த விக்ரமன், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இவர்கள் அனைவரும் மீண்டும் அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இதேபோல் இணைச் செயலாளர்களாக சுந்தர் சி, பேரரசு, லிங்குசாமி, ஏகாம்பவாணன், ஆ.ஜெகதீசன் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
செயற்குழுவுக்கு 17 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2015-2017-ம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் விக்ரமன் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டம் முடிந்தபின், விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இயக்குநர்கள் சங்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அணியினர் செய்த சேவைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.
வருகிற ஆண்டுகளில், முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்வோம்.
சமையல் கேஸ் மானியத்தை நான் திருப்பிக் கொடுத்து விட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கும் மேலும் 200 பேர் கியாஸ் மானியத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு நான் உடல் தானம் செய்து இருக்கிறேன். இதுபோல் சங்க உறுப்பினர்கள் 200 பேர்களும் உடல் தானம் செய்ய முன்வருவார்கள்.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னை மயிலாப்பூரில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார்.