Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சென்னை சினிமா பைனான்ஸியர் மலேசியாவில் கொலை?
சென்னை: சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்ஸியர் முத்துராஜா மலேசியாவில் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் சினிமா பைனான் சியர் முத்துராஜா. மலேசியாவுக்கு சென்ற இடத்தில் திடீரென காணாமல் போனார். வக்கீல் சகோதரர்களான பத்மநாபன், சுரேந்திரன் ஆகியோரை பார்க்க சென்ற முத்துராஜா, கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
வக்கீல் சகோதரர்களுக்கும், முத்துராஜாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வக்கீல் சகோதரர்கள் இருவரும் முத்து ராஜாவை தீர்த்துக் கட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
வக்கீல் சகோதரர்களான பத்மநாபன், சுரேந்திரன் இருவரையும் மலேசிய போலீசார் கைது செய்தனர். இவர்களது கூட்டாளிகள் 8 பேரும் முதலில் கைது செய்யப்பட்டனர். தற்போது சுரேஷ், முரு என்ற மேலும் இருவர் சிக்கியுள்ளனர்.
இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களை இக்கும்பல் கொன்று குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பலர் இவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முத்துராஜாவை பத்திரமாக மீட்டு தருவதற்காக மலேசியாவில் இருந்தபடியே ஒரு கும்பல் ரூ.10 லட்சம் பேரம் பேசிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள முத்துராஜாவின் மனைவி உஷாராணியை போனில் தொடர்பு கொண்டு 2 பேர் பேசியுள்ளனர். இது குறித்து 20 முறை தன்னிடம் போனில் இந்த கும்பல் பேசியதாக உஷாராணி போலீஸில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், முத்துராஜாவின் முதல் மனைவியான ராஜலட்சுமி, தனது கணவர் கொல்லப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.