Don't Miss!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொஞ்ச நஞ்சம் இருக்கும் ரசிகர்களையும் இழக்கும் தமிழ் சினிமா!
Recommended Video
ஆளாளுக்குப் போட்டி போட்டு ஸ்ட்ரைக் அறிவிக்கிறார்கள். ஆனால் மக்களும் அரசாங்கமும் 'ஓ... ஐ ஸீ!' என்று பதினாறு வயதினிலே டாக்டர் போல எதற்குமே ரியாக்ஷன் கொடுக்காமல் கடந்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது. திரையரங்குகள் குறைந்தது, மோசமான படங்களின் வருகை, தவறான முடிவுகள், வேறு வேறு பொழுதுபோக்குகள் ஆக்ரமிப்பு என்று பல காரணங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போதைய சினிமாக்காரர்களின் ஈகோவையும் சேர்த்துக்கொள்ளலாம். தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்ததற்கு போட்டியாக திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்திருக்கிறார்கள். இப்போது படப்பிடிப்பும் நிறுத்தம் என்று அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். திரைப்படத்துறையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களின் நிலை என்ன ஆவது?
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கூத்தாடி எத்தனை பட்டாலும் கண்டுகொள்ள யாரும் வரமாட்டார்கள். இது புரியாமல் வீம்புக்கு ஸ்ட்ரைக் பண்ணி தன் தலையில்தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறது தமிழ் திரையுலகம்!