Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'ஐ.சி.யூ-வில் கிடக்கும் தமிழ் சினிமாவை காப்பாத்துங்க' - எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்!
சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் ஸ்ட்ரைக் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கிக் கிடக்கிறது. சினிமாவை மட்டுமே நம்பியிருக்கும் சில லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
சினிமா எனும் மிகப்பெரும் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி நஷ்டமாகி உள்ளது. ஷூட்டிங் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டதால் செட் போட்டு படப்பிடிப்புக்கு காத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. இந்த மாதம் முழுக்க வேலைநிறுத்தம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது,
"தமிழ் திரைப்படத் துறை தற்போது பலவீனமாகி விட்டது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. விட்டால், அத்துறையின் மொத்த உயிரும் போய் விடும்.
அதனால், இந்தத் துறையைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கூடுதல் சிரத்தையுடன் எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து, இந்தத் துறையைக் காப்பாற்றப் போராடுவதோடு, அனைத்துவிதமான உதவிகளையும் ஒருசேர செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.