Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சினிமாக்காரர்களின் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி
தமிழ் திரையுலகினருக்காக தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள இடத்தில் வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமையும் பிரமாண்டமான கலைஞர் நகரம் என்ற திரைப்பட நகருக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
பைய்யனூர் பகுதியில் சினிமாத்துறையினருக்கு 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இங்கு அவர்கள் வீடுகள் கட்டிக் கொள்ளவுள்ளனர். மேலும், கலைஞர் நகரம் என்ற பெயரில் பிரமாண்ட திரைப்பட நகரத்தையும் நிர்மானிக்கவுள்ளனர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பைய்யனூரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
காலை பத்து மணிக்கு நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, பத்தரை மணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, சரத்குமார், குஷ்பு, இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா உள்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.