Don't Miss!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சினிமாக்காரர்களின் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி
தமிழ் திரையுலகினருக்காக தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள இடத்தில் வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமையும் பிரமாண்டமான கலைஞர் நகரம் என்ற திரைப்பட நகருக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
பைய்யனூர் பகுதியில் சினிமாத்துறையினருக்கு 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இங்கு அவர்கள் வீடுகள் கட்டிக் கொள்ளவுள்ளனர். மேலும், கலைஞர் நகரம் என்ற பெயரில் பிரமாண்ட திரைப்பட நகரத்தையும் நிர்மானிக்கவுள்ளனர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பைய்யனூரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
காலை பத்து மணிக்கு நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, பத்தரை மணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, சரத்குமார், குஷ்பு, இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா உள்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.