Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
உடைந்து சிதறும் டெம்ப்ளேட்டுகள்... வெளிக் கிளம்பி வரும் உலக சினிமாக்கள்.. தலை நிமிரும் தமிழ்
Recommended Video
சென்னை: தமிழ் சினிமா மாற ஆரம்பித்து விட்டது. ரெடிமேட் டெம்ப்ளேட்டுகளை உடைத்து தகர்த்து தலை நிமிர்ந்து தரணியெங்கும் எட்டிப் பார்த்து எபக்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டது.
ஹீரோவை சுற்றும் ஹீரோயின் அல்லது ஹீரோயினை சுற்றும் ஹீரோ, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே மோதல், 4 பாட்டு, கிளைமாக்ஸ் சண்டை என தமிழ் சினிமாவுக்கென ஒரு டெம்ப்ளேட் உண்டு.
தற்போது இந்த டெம்ப்ளேட்டை உடைத்து, தமிழ் சினிமாக்கள் உலக அரங்கையும் கவர ஆரம்பித்துள்ளன. இது வரவேற்கக் கூடியதாக உள்ளது. அதுகுறித்து ஒரு பார்வை...
டூலெட்
திரையில் வெளியாவதற்கு முன்பே, 26 சர்வதேச விருதுகளையும், 2017-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் வென்ற திரைப்படம் "டூலெட்". படத்தின் போஸ்டரில் இதற்கு மேல் இடம் இல்லையே என எண்ணும் அளவுக்கு விருதுகளை வாங்கி குவித்தது இந்த படம். தென்மேற்கு பருவக்காற்று', ‘தாரை தப்பட்டை', ‘பரதேசி', ‘ஜோக்கர்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன், இந்த படத்தை இயக்கியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பேரன்பு ராம்
ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேரன்பு திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நெதற்லாந்து மற்றும் ஷாங்காயில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படம் திரையிடப்பட்டது.
சிறந்த இந்திய திரைப்படம்
போட்டியிட்ட 187 திரைப்படங்களில் முதல் 20 திரைப்படங்களுக்குள் இடம் பிடித்த இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கான NETPAC விருதையும் பெற்றது. இதை தொடர்ந்து ஆசியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழாவான, ஷாங்காய் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பேரன்பு திரைப்படம், மிகுந்த வரவேற்பை பெற்றது.
படைப்பின் மீது நம்பிக்கை
படத்தை ஓராண்டுக்கு முன்னரே முடித்துவிட்டாலும், திரைப்பட விழாக்களில் பங்கேற்ற பின்னரே திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டதாக, இயக்குனர் ராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் தனது படைப்பின் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், பேரன்பையுமே இது காட்டுகிறது.
சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்காமல், கலையை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள கலைஞர்களால் மட்டுமே இது சாத்தியம்.