Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காமெடி நடிகரின் கடைசி நாள், வடிவேலுவுடன் கலக்கியவர் காலமானார்
Recommended Video
குமுளி : பிரியாவிடை கொடுத்த கிருஷ்ணமூர்த்தி - சோகத்தில் மூழ்கியுள்ள திரையுலகம்
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் இவர் இருப்பார். தவசி, நான் கடவுள், எல்லாம் அவன் செயல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தவசி திரைப்படத்தில் காவல் நிலையத்திற்கு முன்னே நின்று கொண்டு வடிவேலுவிடம் அட்ரஸ் கேட்கும் நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலம். திரையுலகில் விளம்பர புரெடக்ஷன் அசிஸ்டென்ட் மேனேஜராக தன் திரையுலக பயணத்தை தொடங்கியவர் கிருஷ்ணமூர்த்தி. பிறகு வடிவேலுவின் குழுவில் சேர்ந்து பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறிய வேடங்களில் நடித்தது மூலம் பிரபலமாகி பின்னாளில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக முன்னேறியவர்.
தேனி மாவட்டம் குமிளி அருகே உள்ள ஒரு இடத்திற்கு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் "பேய் மாமா" திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரின் உடல் இன்று மாலை 3 மணியளவில் சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அவரின் மகன்கள் இருவர் அவரை பார்ப்பதற்காக குமிளிக்கு சென்றுள்ளனர்.
அவர் பற்றிய செய்தியை நடிகர் வையாபுரி தான் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்தார். இவர் இப்படி தீடிர் என்று உடல் நிலை சரி இல்லாமல் ஷூட்டிங் சென்ற போது இறந்து விடுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. சிறிது காலமாகவே அவர் கொஞ்சம் உடல் ரீதியாக தொய்வுடன் காணப்பட்டார் என்று சிலர் சொல்லுகின்றனர்.
மிகவும் பண்பான நல்ல உள்ளத்தை தமிழ் திரையுலகம் இழந்து விட்டது. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரின் நகைச்சுவை மூலம் நம்முடன் என்றும் இருப்பார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் பில்மி பீட் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது . அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.