twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழகத்தில் தெலுங்கு படங்களை ஓட விட மாட்டோம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை

    |

    சென்னை: தென்னாலிராமன் படத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சினை செய்தால், தமிழகத்தில் எந்த தெலுங்குப் படத்தையும் ஓடவிடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான் கூறியது:

    மூன்று ஆண்டுகளுக்கு பின் தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தெலுங்கு மன்னன் கிருஷ்ண தேவராயரை கேலி செய்வது போல காட்சிகள் வருவதாக தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர் .

    தமிழ்நாட்டில் பல இலட்சம் தெலுங்கு மக்கள் எந்த வித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களிடையே வணிகம் செய்து சிறப்பாக வாழ்கின்றனர். தமிழ் மக்களும் தெலுங்கு மக்களோடு அண்ணன் தம்பிகள் போலத்தான் பழகி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தான். இருந்தும் தமிழர்கள் இந்த கட்சிகளுக்கு வாக்களித்து தெலுங்கு தலைவர்களை தங்கள் நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தும் உள்ளனர்.

    Tamil Desiya Koottamappu supports Vadivelu

    வேறு எந்த மாநிலத்திலும் வேற்று மொழியினரை ஆட்சி செய்ய அனுமதிப்பது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே தெலுங்கு மொழி பேசும் தலைவர்களை ஆட்சி செய்ய வைத்துள்ளனர் தமிழர்கள். அந்த அளவிற்கு தமிழர்கள் சகிப்புத் தன்மை மிக்கவர்கள், பரந்த எண்ணம் கொண்டவர்கள் என்பதை தெலுங்கு அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் எல்லாம் தெலுங்கர்கள்தான் நடத்துகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வணிகம் நடத்துகின்றனர்.

    இருப்பினும் இப்போது தெலுங்கு அமைப்புகள் ஒரு தமிழ் படத்தை தமிழ்நாட்டில் ஓடவிட மாட்டோம் என அறைகூவல் விடுப்பது தமிழர்களின் தன்மானத்தை சோதித்து பார்க்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

    தெனாலிராமன் படத்தில் தெலுங்கு மன்னனை இழிவு செய்யவோ அல்லது அவரது பெயரை பயன்படுத்தவோ இல்லை என்று வடிவேலு தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் இந்த தெலுங்கு மக்கள் அமைப்பு வடிவேலுவின் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது, வடிவேலு வீட்டை முற்றுகையிட்டுள்ளது , திரையரங்கில் படத்தை ஓடவிட மாட்டோம் என எச்சரிக்கை செய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் இத்தனை காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் தெலுங்கர்கள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இல்லாமல், தமிழர் உணர்வுகளை மதிக்காமல் ஒரு சிறந்த தமிழ் நகைச்சுவை நடிகரின் படத்தை திரையிட விட மாட்டோம் எனச் சொல்வது தமிழர்களை சீண்டிப் பார்க்கும் செயலாகும்.

    இவர்களுக்கு பின்னணியில் வடிவேலுவை விரும்பாத சில தெலுங்கு அரசியல் கட்சிகள் செயல்படுவதாக நாங்கள் சந்தேக்கிறோம்.

    மண்ணின் மைந்தன்

    எங்கள் மண்ணின் மைந்தரான வடிவேலுவின் படத்திற்கு இந்த தெலுங்கு அமைப்புகள் இனியும் இடையூறு செய்தால் தமிழர்கள் நாங்கள் சும்மா இருந்து விட மாட்டோம். தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம், தமிழ் நாட்டில் நடைபெறும் தெலுங்கு வணிகத்தை தமிழர்கள் புறக்கணிக்குமாறு பரப்புரை செய்வோம். இதனால் தமிழகத்தில் உள்ள தெலுங்கு மக்கள் பாதிப்படைவார்கள், பெரும் இழப்பை சந்திப்பார்கள் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

    தமிழகத்தில் இதுவரை இணக்கமாக வாழும் தமிழ் தெலுங்கு சமூகங்களுக்கு இடையே தயவு செய்து பிரிவினையை , பகைமையை உருவாக்க வேண்டாம்," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Tamil Desiya Koottamaippu, a Tamil outfit warns Telugu protesters against Vadivelu's Tenaliraman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X