Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தமிழ் கைவிட்டாலும் இந்தி கைவிடல... 'மாத்தி யோசி'த்த இயக்குனர்!
சென்னை: தமிழ் சினிமா கைவிட்டாலும் இந்தி சினிமா கைவிடவில்லை என்று சொன்னார், இயக்குனர் நந்தா பெரியசாமி.
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஜிகினா படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. இவர், மாயாண்டி குடும்பத்தார், யோகி, மிளகா, கோரிப்பாளையம், சண்டக் கோழி 2 உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் இந்தி படத்துக்கு கதை எழுதியுள்ளார். ராஷ்மி ராக்கெட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறார். ஆதர்ஷ் குரானா இயக்குகிறார். ரோனி ஸ்கிரிவாலா தயாரிக்கிறார். தடகள வீராங்கனையை பற்றிய இந்தப் படத்துக்காகத் தோற்றத்தை மாற்றுகிறார் டாப்ஸி.
படம் பற்றி நந்தா பெரியசாமி கூறும்போது, தடகளப் போட்டிகளில் சாதனை செய்த ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை இது. உண்மைக் கதைதான் என்றாலும் சினிமாவுக்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வீராங்கனை யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
நட்புன்னா இதுதான்.. காலையிலையும் தம்பதி சகிதமாக வந்து சதீஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமா, என்னை கைவிட்டுவிட்டது. இதனால் இந்திக்குச் சென்றேன். இந்தி என் கைப்பற்றிக்கொண்டது. இந்தப் படத்தை அடுத்து மீண்டும் ஒரு இந்தி படத்துக்கு கதை கேட்டிருக்கிறார்கள். தமிழில் படம் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றார்.