Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் கைவிட்டாலும் இந்தி கைவிடல... 'மாத்தி யோசி'த்த இயக்குனர்!
சென்னை: தமிழ் சினிமா கைவிட்டாலும் இந்தி சினிமா கைவிடவில்லை என்று சொன்னார், இயக்குனர் நந்தா பெரியசாமி.
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஜிகினா படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. இவர், மாயாண்டி குடும்பத்தார், யோகி, மிளகா, கோரிப்பாளையம், சண்டக் கோழி 2 உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் இந்தி படத்துக்கு கதை எழுதியுள்ளார். ராஷ்மி ராக்கெட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறார். ஆதர்ஷ் குரானா இயக்குகிறார். ரோனி ஸ்கிரிவாலா தயாரிக்கிறார். தடகள வீராங்கனையை பற்றிய இந்தப் படத்துக்காகத் தோற்றத்தை மாற்றுகிறார் டாப்ஸி.
படம் பற்றி நந்தா பெரியசாமி கூறும்போது, தடகளப் போட்டிகளில் சாதனை செய்த ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை இது. உண்மைக் கதைதான் என்றாலும் சினிமாவுக்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வீராங்கனை யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
நட்புன்னா இதுதான்.. காலையிலையும் தம்பதி சகிதமாக வந்து சதீஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமா, என்னை கைவிட்டுவிட்டது. இதனால் இந்திக்குச் சென்றேன். இந்தி என் கைப்பற்றிக்கொண்டது. இந்தப் படத்தை அடுத்து மீண்டும் ஒரு இந்தி படத்துக்கு கதை கேட்டிருக்கிறார்கள். தமிழில் படம் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றார்.