Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா லாக்டவுனால் தவிப்பு.. தமிழ் சினிமாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்.. ஆர்.கே.செல்வமணி தகவல்!
சென்னை: கொரோனாவால் தமிழ் சினிமாவுக்கு இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இந்தத் தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி.. முதல்வருக்கும்..கடம்பூர் ராஜூக்கும்.. பாரதிராஜா நன்றி !
தீவிர நடவடிக்கை
இதைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.50 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக இருக்கிறது.
சினிமா துறை
கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக நடைபெறவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
வருமான இழப்பு
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகம் 6 மாதங்களாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் இயங்கவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். திரையுலகம் முடங்கியதால் சினிமா துறையினருக்கு மொத்தமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
2 ஆயிரம் கோடி நஷ்டம்
தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு சம்பளம் இழப்பும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சினிமா துறைக்கு மொத்தம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் சூர்யா, ரூ.80 லட்சம் வழங்கி இருக்கிறார். அதை இன்று முதல் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 வீதம் வழங்க இருக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.