Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. வாக்காளர் பட்டியல் குறைகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகளை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இது தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் எம்.ஜெய்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திப் தேர்தல் அட்டவணை ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சங்க உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதனால் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவித்திருந்த தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுகிறது. புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா ஊரடங்கால் சங்க உறுப்பினர்களில் பலர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கேட்டுக்கொண்டதால், சந்தா தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி (15.06.2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 6 மணிக்குள் செலுத்திவிட வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக குறைகளை சமர்பிக்கவும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கடிதம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் சமர்ப்பிக்கலாம். இந்த தேதிகள் எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.