Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சங்கத் தேர்தல் தள்ளிப் போவதால்.. சினிமா பிரச்னைகளைத் தீர்க்க முன்னாள் தலைவர்கள் தலைமையில் குழு!
சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தல் தள்ளிப் போவதால், சினிமா பிரச்னைகளை தீர்க்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதிப்பால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லாக்டவுனில் ஜாலியா கேட் வாக்.. மல்லிகா ஷெராவத்தின் வைரல் வீடியோ!
முன்னுதாரணமாக
நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாக பிரிந்தாலும் திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஓர் அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
நிம்மதியாக செயல்பட
நமக்கு உண்டான பிரச்னையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ள போவதால் இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை. நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் நிம்மதியாக செயல்பட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
எஸ் ஏ சந்திரசேகர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் தாணு, கேயார், டிஜி தியாகராஜன், முரளிதரன் இவர்களுடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய 42 பேர் கொண்ட குழு, சினிமாவில் உள்ள மற்ற துறையினருடன் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள்.
கமீலா நாசர்
இதனால் நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து இந்தக் குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும் நல்கி திரைத்துறை சிறப்பாக விளங்கிட ஒத்துழைப்பினை நல்கிடுவோம்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் டி. சிவா, ௮ன்பு செழியன், ஐசரி கணேஷ், கமீலா நாசர், கதிரேசன், எடிட்டர் மோகன், ராதாகிருஷ்ணன், முரளி ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன் உட்பட பலர் உள்ளனர்.