Don't Miss!
- News குரங்கு சேட்டை பண்ண முடியாது..பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த கோர்ட்..! பஸ்களில் இனி தானியங்கி கதவு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதிய சங்கம் தொடங்குவதா? பாரதிராஜாவுக்கு கடும் எதிர்ப்பு.. தயாரிப்பாளர்கள் நாளை அவசரக் கூட்டம்!
சென்னை: புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கிய பாரதிராஜாவுக்குத் தயாரிப்பாளர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவாதிக்க நாளை, அவசரக்கூட்டம் நடக்கிறது.
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.
இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி!
உருவாக்க வேண்டாம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போட்டியாக இந்தப் புதிய சங்கம் உருவாகிறது என்றும் இன்னொரு சங்கத்தை உருவாக்க வேண்டாம் என்றும் பல தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். 'எம்.ஜி.ஆர் ஆலோசனைபடி உருவான சங்கம் இது. சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு செப்டம்பரில் தொடர இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று புதிய சங்கத்தை உருவாக்குவது வேதனையாக இருக்கிறது' என்று மூத்த தயாரிப்பாளர்கள் கூறினர்.
பாரதிராஜா மறுத்தார்
இதையடுத்து மறுநாளே, இயக்குனர் பாரதி ராஜா அவசரமாக இந்தச் செய்தியை மறுத்தார். பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிகள் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், திடீரென்று புதிய சங்கம் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் நேற்று வேறொரு அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா.
ராதாகிருஷ்ணன்
முதல் நாள் மறுத்துவிட்டு மறுநாள் ஏன் இப்படியொரு அறிக்கையை அவர் வெளியிட்டார் என்று தயாரிப்பாளர்கள் குழம்பினர். இந்நிலையில் அவர் தொடங்கி உள்ள புதிய சங்கத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுபற்றி ஆலோசிப்பதற்காக, நாளை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
காலத்தின் கட்டாயமா?
இயக்குனர் பாரதிராஜா, கடந்த 1 ஆம் தேதி தனது அறிக்கையில், எனது தலைமையில் புதிய சங்கம் தொடங்கப்படவில்லை என்ற உத்தரவாதத்தை அறிவித்திருந்தார். ஆனால், 3 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், காலத்தின் கட்டாயம், புதிய சங்கத்தை உருவாக்க வேண்டி இருப்பதால் அதைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் என்ன காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்பது தெரியவில்லை.
ஆலோசனை வேண்டும்
இது நமது தயாரிப்பாளர் சங்கத்தைப் பிளவுபடுத்துகிற முயற்சி. இதுபற்றி நாம் அனைவரும் அணி பாகுபாகு இல்லாமல், ஒருமித்த குரலோடு இணைந்து முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் பிளவு படாமல் இருப்பது பற்றி ஆலோசிப்பதற்கு நாளை (புதன்கிழமை) காலை. தயாரிப்பாளர்களை சங்கத்துக்கு வருமாறு அழைக்கிறேன். உங்கள் ஆலோசனையை நீங்கள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.