Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி வழங்கணும்.. சினிமா தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை!
சென்னை: கேரளாவை போல தமிழ் சினிமாவிலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று தழிழக முதலமைச்சருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கேரளாவில், சினிமா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில் 5 பேர் மட்டுமே பாதுகாப்புடன் கலந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.
சாதி இருக்குன்னு சொல்றவங்கள நம்பு.. ஆனா அப்படி சொல்றவங்கள நம்வே நம்பாத.. பிரபல இயக்குநர் அதிரடி!
முதல்வரிடம் கோரிக்கை
இந்நிலையில் இதே போல, தமிழ் சினிமாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை.
வாழ்வாதாரம்
50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கி யுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், படங்களை தயார் செய்ய முடியும்.
நிபந்தனைகளோடு
தற்போது 11 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போன்று, திரைப்படத்துறைக்கும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் செய்வதற்கு, ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக்கொண்டபடி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
கட்டுப்பாடுகள்
கேரள அரசும் இந்த பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. படத்தொகுப்பு, டப்பிங், கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் பின்னணி இசை, ஒலிக் கலவை உள்ளிட்ட போஸ்ட்-புரொடக்சன் பணிகளை சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்' என்று கூறியுள்ளனர்.
கடம்பூர் ராஜூ
இதில் பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், கேயார், கே. முரளிதரன், டி.சிவா, பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர் உட்பட பல தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். இதே கோரிக்கையை தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தயாரிப்பாளர்கள் டி.சிவா, மனோபாலா, ஜி.தனஞ்செயன், எம்.திருமலை ஆகியோர் வழங்கினர்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு