Don't Miss!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்.எஸ்.ஆர். மறைவு - தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அரை நாள் ரத்து
சென்னை: பழம் பெரும் நடிகரும், மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எஸ்.ஆர். மறைவை ஒட்டி இன்று அரை நாள் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் அரைநாள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.
சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். நேற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 86.
பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ஆர். மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அரை நாள் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை பெப்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.