ரஜினி பட இயக்குநர் ருத்ரய்யா காலமானார்
சென்னை: திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். உடல்நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "அவள் அப்படித்தான்' படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கென முதன்முதலாக தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்த ருத்ரையா 1980-ஆம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த "கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
ருத்ரையாவுக்கு கங்கா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ருத்ரையாவின் மரணச்செய்தி கேட்டு தமிழ் திரைஉலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது உடலுக்கு ஏராளமான திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











