Don't Miss!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
RRR ‘கோலே’ பாடலில் கப்பலோட்டிய தமிழன்.. சுதந்திர போராட்ட வீரர்களை சூப்பரா பெருமைப்படுத்திய ராஜமெளலி!
சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படம் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் டைட்டிலில் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகிறது.
படத்தின் ரிலீஸ் புரமோஷனுக்காக இன்னொரு சிறப்பான பாடலை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.
அநேகமாக இந்த பாடல் படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது திரையிடப்படும் என தெரிகிறது. இந்த பாடலில் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் பெயரும் அவரது பிரம்மாண்ட வடிவமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராஜமெளலி படம்.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா?
கோடிக்கணக்கில் புரமோஷன்
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 50 கோடிக்கு மேல் புரமோஷனுக்கே ஒதுக்கி இருப்பார் போல இயக்குநர் ராஜமெளலி. இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்து பொங்கல் வசூல் வேட்டையை நடத்தி விட வேண்டும் என நினைத்த அவருக்கு கொரோனா மற்றும் ஜகன் மோகன் ரெட்டியின் டிக்கெட் நடவடிக்கையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இனிமே வேண்டாம்
மும்பை, சென்னை, ஹைதராபாத், கொச்சின் என பறந்து பறந்து பல கோடிகளுக்கு செட் போட்டு நடத்தப்பட்ட புரமோஷன்களே போதும், புதிதாக எந்தவொரு புரமோஷனும் வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் இனியும் செலவு செய்ய ரெடியாக இல்லை என்பதையும் உணர்ந்த ராஜமெளலி ரிலீஸ் புரமோஷனுக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தாமல் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
சுதந்திர போராட்ட வீரர்களுக்காக
நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் தேசத்துக்காக தங்களது வாழ்க்கையையும் இன்னுயிரையும் ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகி உள்ள கோலே பாடல் நேற்று வெளியாகி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், வ,உ. சிதம்பரனார், சத்ரபதி சிவாஜி, பகத் சிங் என ஏகப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.
கப்பலோட்டிய தமிழன்
காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இந்த பாடலில் இடம்பெறவில்லை. பெரும்பாலும், ஆயுதத்தை ஏந்தி போராடியவர்களையே இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளனர். இதில், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரை திருநெல்வேலியின் வீரமான கோலே என பாடலாசிரியர் மதன் கார்க்கி குறிப்பிட்டுள்ளது திருநெல்வேலிகாரர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதே சமயம் மற்ற சுதந்திர போராட்ட வீரர்களை மாநிலங்களுடன் குறிப்பிட்டு வரிகள் உள்ள நிலையில், வ.உ.சியை ஏன் தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர் என சொல்லவில்லை என கேள்விகளும் எழுந்துள்ளன.
மூவரும் செம
நாட்டுக் கூத்து பாடலில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் மட்டுமே இணைந்து ஆட்டம் போட்ட நிலையில், இந்த பாடலில் நடிகை ஆலியா பட்டும் இவர்கள் இருவருடன் இணைந்து செம நடனம் போட்டுள்ளார். தெலுங்கு ட்யூனுக்கு போட்ட தமிழ் பாடல் போல இருப்பதால், வரிகள் பெரும் அளவில் ஹலமதி ஹபிபோ போலவே புரியாமல் இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?