twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செம்மொழி மாநாடு: நடிகர் சிவக்குமார் தலைமையில் கருத்தரங்கம்!

    By Sudha
    |

    Sivakumar
    கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு தினமான நாளை நடிகதர் சிவக்குமார் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது.

    கடந்த 23-ந் தேதி கோலகலமாக தொடங்கிய செம்மொழி மாநாட்டில், தினமும் கருத்தரங்கம், கவியரங்கம், சொற்பொழிவு கலகலப்புக்கும் சுவாரஸ்யத்துகும் பஞ்சமில்லாமல் போகிறது.

    மாநாட்டின் நிறைவு விழா நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. விழாவை யொட்டி காலை 9.45 மணிக்கு பொது அரங்க நிகழ்ச்சி திருக்குவளை சகோதரிகள் மங்கல இசையுடன் தொடங்குகிறது.

    அதைத்தொடர்ந்து வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் சுப வீரபாண்டியன் தொடக்க உரையாற்றுகிறார்.

    பீட்டர் அல்போன்ஸ் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் பேசுகிறார்.

    அதைத்தொடர்ந்து ஜெகத் கஸ்பார் (யாதும் ஊரேயாவரும் கேளிர்), பேராசிரியர் பர்வின் சுல்தானா (உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே), வக்கீல் ராமலிங்கம் (தீதும் நன்றும் பிறர் தர வாரா), வக்கீல் அருள்மொழி (போரைப்புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே), கம்பம் செல்வேந்திரன் (ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே), திருச்சி செல்வேந்திரன் (அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து) ஆகிய தலைப்புகளில் பேசுகிறார்கள்.

    பிற்பகல் 2 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் வழங்கும் கலை நிகழ்ச்சியும், 2.30 மணிக்கு பாலசாயி குழுவினர் வழங்கும் கலந்திசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X