Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செம்மொழி மாநாடு: நடிகர் சிவக்குமார் தலைமையில் கருத்தரங்கம்!
கடந்த 23-ந் தேதி கோலகலமாக தொடங்கிய செம்மொழி மாநாட்டில், தினமும் கருத்தரங்கம், கவியரங்கம், சொற்பொழிவு கலகலப்புக்கும் சுவாரஸ்யத்துகும் பஞ்சமில்லாமல் போகிறது.
மாநாட்டின் நிறைவு விழா நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. விழாவை யொட்டி காலை 9.45 மணிக்கு பொது அரங்க நிகழ்ச்சி திருக்குவளை சகோதரிகள் மங்கல இசையுடன் தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் சுப வீரபாண்டியன் தொடக்க உரையாற்றுகிறார்.
பீட்டர் அல்போன்ஸ் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து ஜெகத் கஸ்பார் (யாதும் ஊரேயாவரும் கேளிர்), பேராசிரியர் பர்வின் சுல்தானா (உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே), வக்கீல் ராமலிங்கம் (தீதும் நன்றும் பிறர் தர வாரா), வக்கீல் அருள்மொழி (போரைப்புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே), கம்பம் செல்வேந்திரன் (ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே), திருச்சி செல்வேந்திரன் (அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து) ஆகிய தலைப்புகளில் பேசுகிறார்கள்.
பிற்பகல் 2 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் வழங்கும் கலை நிகழ்ச்சியும், 2.30 மணிக்கு பாலசாயி குழுவினர் வழங்கும் கலந்திசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.