Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயன்தாரா திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.. எங்கே இருக்கிறார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
Recommended Video
தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான், கேரளாவில் இருந்து நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடல... விக்னேஷ் சிவனின் பெரியம்மா வேதனை
நேரில் அழைப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி திருமணத்துக்கு அழைத்திருந்தனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
முதலமைச்சர் பங்கேற்கவில்லை
இந்நிலையில், இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நயன்தாரா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர்
தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ. 1627 கோடி மதிப்பீட்டிலான பாரத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் முதலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இலை கம்பிவடம் பதிக்கும் பணியை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா
திருமணத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி கலந்து கொண்டாரா
சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கேமியோவாக வந்து செல்வார். அதன் பிறகு நண்பேன்டா, இது கதிர்வேலனின் காதல் உள்ளிட்ட படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில், நயன்தாராவின் திருமணத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாரா இல்லையா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!