Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழ்நாட்டில் டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு
முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று சித்தரிக்கப்பட்ட ஆங்கில திரைப்படமான டேம் 999 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு தமிழ்ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த திரைப்படத்தை திரையிட நவம்பர் 24-ல் தமிழக அரசு தடை விதித்தது. முதலில் 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கான தடையை ஏன் நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விளக்க மளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
6 மாதம் தடை
இந்த நிலையில் திரைப்படத்திற்கான தடையை தமிழக அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சோஹன்ராய், நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.