Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பொங்கல் ஸ்பெஷல்: தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சியைத் திரையிட அனுமதி அளித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது 3 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி ரஜினிமுருகன், கதகளி, தாரை தப்பட்டை மற்றும் கெத்து ஆகிய 4 படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வருகின்ற 15.1.2016 தொடங்கி 21-1-2016 வரை சுமார் 7 நாட்களுக்கு அனைத்துத் திரையரங்குகளிலும் கூடுதலாக ஒரு காட்சியைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
வழக்கமாக 4 காட்சிகளை மட்டுமே திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் அதனை முன்னிட்டு ஒரு காட்சியை அதிகரித்துக் கொள்ள அனுமதி கேட்டு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் வேண்டுகோளை முன்னிட்டு 15-1-2016, 16-1-2016, 17-1-2016 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கும், 18-1-2016, 19-1-2016, 20-1-2016, 21-1-2016 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சியாக மதியம் 2.30 மணிக்கும் சிறப்புக காட்சிகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் தகவலை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை மற்றும் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அறிக்கை விட்டு உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
அரசின் இந்த அனுமதியானது தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.