சத்யராஜுக்காக தம் கட்டினதெல்லாம் வீணாப் போச்சே...: கடுப்பில் தமிழர்கள்
சென்னை: பாகுபலி 2 விஷயத்தில் தமிழர்கள் சத்யராஜுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தும் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
காவிரி போராட்டத்தின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில் சத்யராஜ் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று கூறி தமிழர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.

வருத்தம்
தமிழர்களின் பெரும் ஆதரவு கிடைத்த போதிலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்காக சத்யராஜ் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் கன்னடர்களுக்கு எதிரானவன் அல்ல என கூறியுள்ளார். சத்யராஜின் பெருந்தன்மை கர்நாடக அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் போனது.

அதிருப்தி
மன்னிப்பு கேட் மாட்டார் சத்யராஜ். அவர் தமிழன்டா என்று சமூக வலைதளங்களில் மார்தட்டிய தமிழர்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர்.
பம்முறாரு
சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது குறித்து அறிந்த ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என்னயா மரதமிழர் பம்முறாரு??
#Bahubali2 #sathyaraj
வீரத் தமிழன்
#sathyaraj வீரத் தமிழன் னு நேற்றுதானடா சொன்னோம் 😂 #Justiceforsathyaraj
சத்யராஜ்
#sathyaraj மன்னிப்பு கேட்டுட்டா #Bahubali2 வ பாக்க மாட்டேன்னு சொன்னவனுங்கள தேடிக்கிட்டு இருக்கேன் !!
தமிழன்
#JusticeForSathyaraj ரோஷம் உள்ள தமிழனாய் பாகுபலி படத்தை நான் பார்க்க மாட்டேன் #Justicefortamilian
உணர்வு
#Justiceforsathyaraj டேக் போட்டவன்லா உங்க செருப்ப எடுத்து நீங்களே அடிச்சுகங்கடா அவனுக வெறும் கூத்தாடிக தான் தமிழன்,உணர்வுலா அப்பறம் தான்


Click it and Unblock the Notifications











