Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தமிழ்ப்படம் 2 ரிலீஸ் எப்போ: சூசகமாக அறிவித்த இயக்குனர்
Recommended Video
சென்னை: சி.எஸ் அமுதனின் ட்விட்டர் பதிவைப் பார்க்கும்போது தமிழ்ப்படம் 2, ஜூலை 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவர இருக்கும் தமிழ்படம் 2.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, சந்தான பாரதி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபி அபர்னாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். கண்ணனின் இசையில் பாடல்கள் வெளியிடப்படுள்ளன.
Basically I am a watch mechanic என்று எழுதப்பட்ட அட்டை மேசை மீது இருக்கும்போதே 24 படத்தின் சூர்யா போன்று ஒருவர் பேசிக்கலி ஐம் எ வாட்ச் மெக்கானிக் என்று சிவாவிடம் அறிமுகம் செய்யும் காட்சியோடு துவங்கும் புதிய வீடியோவும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
Thinking of planning my holy yatra from Kasi on the early morning of 12th.
— C.S.Amudhan (@csamudhan) July 8, 2018
இந்த நிலையில், ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் சி.,எஸ். அமுதன் ஜூலை 12 ஆம் தேதி காலை காசியிலிருந்து புனித யாத்திரையை துவங்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். பட ரிலீஸ் தேதியைத்தான் சூசகமாக அறிவிக்கிறார் என நெட்டிசன்கள் பேசிக்கொள்கின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.