ஷீத்தல் பிரிய சந்தேகம் தான் காரணமா.. காசுக்காக அசிங்கமா பேசுவியா.. பயில்வானை விளாசிய பப்லு!
சென்னை: இளம் காதலி ஷீத்தலை பிரிந்தது குறித்து அசிங்கமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை பப்லு பிரித்விராஜ் பேட்டியில் விளாசி உள்ளார்.
மிக பிரபலமான நடிகரான இருக்கும் பிரித்திவிராஜ், பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்.

நடிகர் பப்லு: தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200 படங்களில் நடித்துள்ளார் பப்லு.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
பிரிந்தனர்: 57 வயதான பப்லு 23 வயதே ஆன ஷீத்தலுடன் உறவில் இருந்தது பேசுபொருளான நிலையில், பேட்டி அளித்த பப்லு, என்னைப் பார்த்தால் 57 வயசு ஆளுமாதிரி தெரியுதா... எனக்கு பொம்பள சோக்கு கேக்குது என்று பேசி பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
பயில்வான் சொன்ன தகவல்
இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஷீத்தல் பல நாட்களாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பப்லு ஷீத்தலை அந்தரங்க ஆசைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு மீண்டும் திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு விருப்பம் இல்லை என்று பேசி இருந்தார்.
அந்த தப்பை செய்யமாட்டேன்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பப்லு, முதலில் நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை பொது இடத்தில் பேசிவிட்டேன். தெரியாமல் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன். எந்த காரணத்திற்காகவும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடத்தில் பேச மாட்டேன்.
காசுக்காக அசிங்கமா பேசுவியா: பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி மோசமாக பேசி இருக்கிறார். அவருக்கு வேலை இல்லை. அவரால் பீச்சில் ஒழுங்காக கூட நடக்க முடியாது. நீயும் ஒரு நடிகன் தானே, நாம் அனைவரும் ஒரே குடும்பம் தானே காசுக்காக இப்படி அசிங்கமா பேசுவியா... உன்னுடைய அம்மாவையோ, தங்கையோ, பெண்ணையோ இப்படி அசிங்கமாக பேசினால், உனக்கு எவ்வளவு வலிக்கும். அசிங்கமானவர்களால் அசிங்கமாத்தான் பேச முடியும் என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக தாக்கி பேசினார்.


Click it and Unblock the Notifications











