சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!
சென்னை: தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு தேதி கொடுக்கலாம் இருப்பது உள்ளிட்ட பல புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

நோட்டீஸுக்கு பிறகும் இதை தொடர்ந்தால் அவர்கள் உடன் இனி எந்த தயாரிப்பாளரும் பணியாற்ற கூடாது என முடிவெடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விவாதித்தனர். அதில் முக்கியமானதாக தயாரிப்பாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டும் தேதி கொடுக்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல நடிகர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

விளக்கம் வேண்டும்: அந்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்காத முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றனர். இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு கூறுமாறு தெரிவித்திருக்கின்றனர். நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
5 முன்னணி நடிகர்கள்: அதில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிறுவனத்திடம் சிம்பு முன் பணம் பெற்று கால்ஷீட் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக அவருக்கு ரெட் கார்ட் வழங்கவும், அதேபோல் மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலுவிடம் முன் தொகை பெற்று அவரின் படத்தில் நடிக்காத காரணத்திற்காக விஷால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு கால்ஷீட் வழங்காததற்காக எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் மதியழகன் புகாரின் அடிப்படையில் அதர்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல் யோகி பாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெட் கார்ட்: இது குறித்து முறையான பதில் கொடுத்தால் அவர்களுடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தருவது என்றும் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரெட் கார்ட் விதிப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தவிர விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தில் நிதியை முறையாக கையாலாத காரணத்திற்காக அவர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தியேட்டர் விமர்சனம்: மேலும்,படம் வெளியானதும் தியேட்டர் வாசலில் படம் எப்படி இருக்கு என்று எடுக்கப்படும் விமர்சனங்கள் மூன்று நாட்களுக்கு பிறகு தான் வரவேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











