Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விஷால் அண்ட் டீம்அமோக வெற்றி
சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலளர் பதவியை வகித்து வரும் விஷால், இதன் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாக பொறுப்பை வகிந்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் புது அணி உருவானது. நம்ம அணி என்று உருவாக்கப்பட்ட இந்த அணியின் சார்பில் அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ஜ், கெளதம்வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதே போல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன், விஜயமுரளி உள்ளிட்டோர் இந்த அணியின் சார்பில் போட்டியிட்டனர்.
இதேபோல 3-வது அணியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கே.ஆர். தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த அணியின் சார்பில் ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.கதிரேசன் உள்ளிட்டோர் நிர்வாக பொறுப்பை கைப்பற்ற போட்டியில் இருந்தனர்.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிக வாக்குகள் பெற்று விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்றனர்.
விஷால் அணியினர் 478 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். ராதாகிருஷ்ணன் அணியினர் 335 வாக்குகளை பெற்றனர். இதையடுத்து விஷால் அணியினர் 143 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
கேயார் அணி 224 வாக்குளைப் பெற்றது.
-
’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!